காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்

சென்னைக்கு 690 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மணிக்கு 11 கி.மீ வேகத்தில் ஆந்திர கடற்கரையை நோக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் கரையோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்,

இன்று முதல் 17ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தகவல் அளித்துள்ளார்.