மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக போலி செய்திகள் :பரப்பினால் கடும் நடவடிக்கை கோயில் நிர்வாகம்..

திருவிழாக்களிலேயே மிகப் பெரிய திருவிழா என்றால் அது மதுரை சித்திரைத் திருவிழாதான். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமா திருவிழா கோயில் வளாகத்திற்குள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதியில்லை, தற்போது 2-ம் கட்ட கரோனா தொற்றால் திருவிழா குறித்து போலியான செய்திகள் சமூகக வலைத்தளங்களில் பரப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக போலியான தகவலை சமூகவலைத்தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா தொடர்பாக பரவும் நிகழ்ச்சி நிரலுக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தொடர்பில்லை. எனத் தெரிவித்துள்ளது