நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  சிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த வழக்கில் அவரே வாதிட வசதியாக ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மகள் திருமணத்திற்காக பரோலில் விடுவிக்குமாறு நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.