ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கிறது: உயர்நீதிமன்றம் கவலை..

ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கிறது என்று ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டத்தை தடை செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கவலையுடன் கருத்து தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை கோரிய வழக்கில் விராட்கோலி, தமன்னாவை எதிர்மனுதாரராக சேர்க்க மறுப்பு தெரிவித்து விளையாட்டு நிறுவனங்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.