நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

2019 -ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் சற்று முன் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.

இரு அவைகளின் கூட்டக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.. அவர் உரையின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு :

*நாடு முழுவதும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளது

*ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

*மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம்

*பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 21 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

*அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரம் வசதி செய்யப்படும்

*நான்கரை ஆண்டுகளில் 13 கோடி வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

*ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்