காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று : நீதிபதிகள் வேதனை…

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டி சிறையிலேயே சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை முன்வைத்துள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற விசாரணையை பொதுமக்கள் குறைத்து எடைபோட்டு விட வேண்டாம் என்றும் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் பரிந்துரை அளித்தனர்.