தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் உயிரிழப்பு : ஸ்டாலின் வேதனை …

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் இறந்தது வேதனை தருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும்.

ராஜ் தொலைக்காட்சி செய்தி பிரிவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்முருகனுக்கு கடந்த 13 நாட்களுக்கு முன் கரோனா பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.