தனியார் பள்ளிகள் ஆன்லையன் வகுப்புகள் எடுக்கக்கூடாது அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..

தனியார் பள்ளிகள் ஆன்லையனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. மீறி ஆன்லையன் வகுப்புகள் எடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் பொதுமுடக்க காலத்தில் வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.