புதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..

புதுச்சேரியில் இன்று மேலும் புதியதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 904 ஆக உயர்ந்துள்ளது.

405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 435 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.