தொடரும் கனமழை: நெல்லை,தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை…

தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்குச் சூழச்சியால் காலை முதல் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாளை இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதால் நாளை பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை 26 செ.மீ பதிவாகியுள்ளது. அதுபோல் 4 மாவட்டங்களில் பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கன மழை எச்சரிக்கை அடுத்த 36 மணி நேரத்திற்கு விடப்பட்டுள்ளதால் மனோனட மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.