ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி..


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஜோதி ரெட்டிபட்டி பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு நிலைகளில் வயதிற்கு ஏற்றவாறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் மதுரையைச் சேர்ந்த எஸ்.எஸ். மணிகண்டன் முதல் பரிசை வென்றார். இரண்டாம் பரிசை மதுரையைச் சேர்ந்த எஸ்.கணேஷ் பாபு வென்றார். மூன்றாம் பரிசை மதுரையைச் சேர்ந்த பி.உமா மகேஸ்வரன் வென்றார்.

முதல் பரிசு வென்ற வீரருக்கு ரூ.6000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் கோபால் சாமி மற்றும் ராஜபாளையம் சதுரங்க கழக செயலாளர் மெ.மெய்யப்பன் உட்பட பலர் வெற்றி பெற்ற சதுரங்க வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.