இராமாயண சுற்றுலா : இலங்கை-இந்திய மக்களுக்கு ஓர் நற்செய்தி..


வரலாற்று முக்கியத்துவம் மிக்க இராமாயணத்துடன் தொடர்புபட்ட புனித தலங்களை தரிசிப்பதற்கு வசதியாக இந்திய ரயில்வே புதிய தொடருந்துச் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீ இராமாயண எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்த தொடருந்துச் சேவையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் இருந்து ஆரம்பமாக உள்ள இந்த தொடருந்துச் சேவை, சீதையை சிறை வைத்திருந்த இலங்கையில் ராவணன் வாழ்ந்த பகுதி வரையில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான விவரங்களை இந்தியாவில் இருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் புத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றுலா தொடருந்துச் சேவை 16 நாட்களைக் கொண்டாதாக ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

இந்தியாவில் டெல்லிக்கு அருகாமையில் உள்ள சப்பிடார்ஜ் (Safdarjung station) தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த தொடருந்து அயோத்தியில் அனுமான் கர்ஹி (Hanuman Garhi) என்ற நிலையத்தில் நிறுத்தப்படும். இதன் போது கண்ணக் பவான் (Kanak Bhawan)ஆலயத்தை தரிசிப்பதற்கும் ராம்கோட் (Ramkot) புனித தளங்களை தரிசிப்பதற்கும் இது வசதியாக அமையும்.

ஸ்ரீ இராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் நண்டிக்ரம், சிதமர்ஹி (Sitamarhi), ஜனக்பூர் (Janakpur), வாரணாசி (Varanasi), ப்ரயக் (Prayag), ஸ்ரீங்கவெர்பூர் (Shringaverpur), சித்ரகூட் (Chitrakoot), நாசிக் (Nasik), ஹம்பி ராமேஸ்வரம் Hampi Rameshwaram ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.

இந்த பகுதியில் உள்ள புனித வழிபாடு தளங்களை தரிசிப்பதற்கு வீதிவழியாக பயணித்து வழிப்படுவதற்கான வசதிகள் செய்யப்படும்.

இலங்கையைப் பொறுத்தவரை சென்னையில் இருந்து கொழும்புக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவத்துவதுடன் நுவரெலியா றம்பொடை சீதை அம்மன் கோவிலில் தரிசிப்பதற்கும் சிலாபத்தினுள் உள்ள புனித தளங்களை தரிசிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஸ்ரீ இராமாயண எஸ்க்பிரஸ் 800 ஆசனங்களை கொண்டதுடன் ஒருவருக்கு இந்திய நாணயத்தில் பயணக்கட்டணமாக 15 ஆயிரத்து 120 ரூபா அறவிடப்படும். உணவு உள்ளிட்ட தங்குமிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை இது கொண்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.