சாலை பாதுகாப்பு வாரவிழா- 2023 : காரைக்குடியில் விழிப்புணர்வு பேரணி..

தமிழ்நாடு அரசின் சாலை பாதுகாப்பு வாரவிழா 2023 – கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று காலை சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


சாலை விழிப்புணர்வு பேரணியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துதுரை, காரைக்குடி மோட்டர் வாகன போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார், காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார், வாகன பயிற்சி மைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி தேவர் சிலையில் தொடங்கி பெரியார் சிலை, அம்பேத்கார் சிலை, கல்லுாரி சாலை வழியாக வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை அடைந்தது.


“சாலை விழிப்புணர்வு பேரணியில் சாலை விதிகளை மதிப்போம் விலை மதிப்பற்ற உயிர்களை காப்போம்” என்ற முழக்கத்தோடு தலைக்கவசம் அணிவது மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேனர்களை ஏந்தி சென்றனர்.

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை காரைக்குடி மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்