சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வழக்கு :உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தேவி மாங்குடி வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவித்து சான்றிதழ் அளித்தனர்,ஆனால் சிறிது நேரத்தில் மறு வாக்கு எண்ணிக்கை என குளறுபடி செய்து பிரியதர்ஷ்னி ஐயப்பன் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இதனை எதிர்து தேவிமாங்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பதவியேற்புக்கு தடை வாங்கினார். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் தேவி மாங்குடி வெற்றிபெற்றதாக தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பிரியதர்ஷினி ஐயப்பன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார் . வழக்கின் விசாரணையை முடிந்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன். இது மேல் முறையீட்டுக்கு உகந்த வழக்கல்ல என தீர்ப்பு வழங்கியது.

தேவிமாங்குடி காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரின் மனைவியாவார் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி பட்டாசு வெடித்து தீர்ப்பைக் கொண்டாடினர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்