செம்மரம் கடத்திய வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது…

பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் ரூ.48 கோடி செம்மரம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி பாஸ்கரனை கைது செய்தனர்.
. சென்னையை சேர்ந்தவர் சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர்.
ஜாமீனில் உள்ள நிலையில் பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் கடந்த ஆண்டு 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று அண்ணாநகரில் உள்ள பாஸ்கரன் வீட்டிற்கு சென்ற மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரை தியாகராய நகரில் உள்ள திரை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு வைத்து நள்ளிரவில் முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஸ்கரனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர்.