பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நல்ல திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதி, வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கிராமப்புற, மலைப்பகுதி பள்ளிகளில் சரியான நேரத்திற்கு வருவது கஷ்டம் – ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி கல்வி அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.