தென்மேற்கு பருவமழை ஜூன் 4ல் தொடங்க வாய்ப்பு..

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 1ல் தொடங்கும்.

இந்த ஆண்டு, மூன்று நாட்கள் தள்ளி, ‘ஜூன், 4ல், பருவமழை தொடங்கும்’ என, டில்லியில் உள்ள தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

‘இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை, சராசரிக்கும் சற்று குறைவாகவே இருக்கும்’ என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.