மாணவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்


பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில், ’மாணவர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுவதோடு, மாணவர்கள் மீதான வழக்குகளை ‘குதிரை பேர’அரசு ரத்து செய்ய வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.