தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வரும் 6ம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.