தமிழகத்தில் மேலும் புதியதாக 5,495 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5,495 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் மேலும் 76 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,307 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவில் இருந்து இன்று 6,227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,649 -ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 978 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,47,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,33,987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று 17 பேர் கரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,959 ஆக உள்ளது.