தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,367 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.