தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி,கல்லுாரி,, தியேட்டர்களுக்கு அனுமதி..

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பில் கடந்த முறை தளர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் தற்போது கரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியதை அடுத்து சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 1-ஆம் தேதிமுதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50% மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி
டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டயப்படிப்பு வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த அனுமதி
நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு பயிற்சியாளர்களுடன் 50% இயங்க அனுமதி
50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை ஆக்ஸட் 23-ஆம் தேதிமுதல் இயக்க அனுமதி
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
தமிழ்நாடு திறம் மேம்பாட்டு கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி
தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி
கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி. கடற்கரைகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறுவியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம், சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
உயிரியல், தாவரவியல் மற்றும் படகு இல்லங்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்க அனுமதி
இரவு 9 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 10 மணிவரை செயல்படலாம்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி போன்ற தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.