எல்லா குழப்பத்திற்கும் தேர்தல்தான் ஒரே தீர்வு : அன்புமணி ராமதாஸ் அறிக்கை…

குழப்பங்களால் நடைபெறும் ஆட்சிக்கு சட்டப்பேரவை தேர்தல் தான் ஒரே தீர்வு என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 பேர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆட்சியை தக்கவைக்கத்தான் அரசு போராடும் என்றும், நலத்திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு நேரமிருக்காது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் நிலவும் அனைத்து வகையான குழப்பங்களுக்கும் தீர்வு காணும் வகையில், சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.