தமிழகத்தில் இன்று புதியதாக 1,714 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதியதாக 1,714 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

தமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 311 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தொற்று தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 531 ஆக அதிகரித்துள்ளது