தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்த வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 771கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளது. இதனால், தமிழகத்தில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக தமிழகத்தில் இன்று கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 771 ஆக உள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

சென்னையில் மேலும் 324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2332ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 188 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணமலை மாவட்டத்தில் 42 பேருகக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.