தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,975 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.79 லட்சத்தினை கடந்துள்ளது.

இன்று பரிசோதனை செய்யப்பட்ட 73,547 மாதிரிகளில் 5,975 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 25வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,79,358 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,047 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,19,327 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,517 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 5,975 நபர்களில் 1,298 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,25,389 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,581 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.