தமிழகத்தில் இன்று புதியதாக 5,951 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 951 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கரோனா தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.