தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேர் கரோனா தொற்றால பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அரசு மருத்துவமனையில் 84 பேர், தனியார் மருத்துவமனையில் 36 பேர் என 120 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இதுவரை 5886 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இன்று 5,667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுனால் இதுவரை 2,83,937 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 67,532 மாதிரிகளும், 65,643 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 37,78,778 மாதிரிகளும், 36,47,582 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.