சுங்கச்சாவடிகளில் எந்தவித முன்னறிவிப்புமின்றி கட்டண உயர்வு : டிடிவி தினகரன் கண்டனம்

சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்தவித வெளிப்படையான அறிவிப்பும் இல்லாமல் திடீரென கட்டணங்களை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது.

நடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பராமரிப்பில்லாத சாலைகள் உள்ள பகுதிகளில் கூட அதிகளவில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்கள் மக்களுக்கு பெரும் சுமையாகிவிட்டன என்று கூறியுள்ளார்.