உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு-விற்கு கரோனா தொற்று உறுதி..

உளுந்துார் பேட்டை அதிமுக உறுப்பினர் குமரகுருவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கும் கரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட் பதிவில்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய செய்தி அறிந்து அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

என பதிவிட்டுள்ளார்.