சத்துணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு : பத்திரிகையாளர் மீது வழக்கு..

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூர் தொடக்கப்பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள, குருமா அல்லது பருப்பு கூட்டு வழங்காமல் வெறும் உப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது.

இதுபற்றிய வீடியோ கடந்த 22ம் தேதி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சில ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், பத்திரிகையாளரை அழைத்து வீடியோ எடுக்க வைத்ததாக கூறி பஞ்சாயத்து தலைவரின் உதவியாளர் ராஜ்குமார் பால்,

வீடியோவை பதிவு செய்த பத்திரிகையாளர் பவன் குமார் ஜெய்ஸ்வால் மீது மிர்சாபூர் மண்டல கல்வி அதிகாரி அளித்த புகாரின் பேரில் அகரவுரா போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.