வேதாரண்யம் அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது..

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கடலோர காவல்படை கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கள்ளிமேடு கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இந்திய கடலோர காவல்படையை சேர்ந்த காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மொத்தம் 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 4 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை கடலோர காவல்படையினர் காரைக்கால் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.