நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…

மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி பிரசாரம் செய்து வரும் அன்புமணி ராமதாஸ் தமிழக எல்லையில் ஆந்திரா அரசு கட்டிய தடுப்பணைகளை பார்வையிட்டார்.

அப்போது அங்குள்ள கனகநாச்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர்

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.