உலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..

உலகளாவிய ஜனநாயக அட்டவணையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின்னேறியுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான வெளியிடப்பட்ட ஜனநாயகக் குறியீட்டின் பட்டியலில் பொருளாதாரத்தை புலனாய்வு பிரிவு (ஈஐயு) இந்தியாவை “குறைபாடுள்ள ஜனநாயகம்” என்று பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் சிவில் சுதந்திரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் மொத்த மதிப்பெண் 2018 இல் 7.23 ஆக இருந்தது. இது தற்போது 6.90 ஆக குறைந்துள்ளது.

நாட்டில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை (திருத்தம்) சட்டம், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை மற்றும் சர்ச்சைக்குரிய என்.ஆர்.சி (குடிமக்களின் தேசிய பதிவு) குறித்து கவலை தெரிவித்த பொருளாதாரத்தை புலனாய்வு பிரிவு, ஜனநாயக பின்னடைவுக்கு இந்த காரணங்கள் தான் முக்கியமானதாகும் என்றது.

இந்த உலகளாவிய பட்டியலில் 165 நாடுகளிலும், இரண்டு பிராந்தியங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த நாடுகளில் ஜனநாயகம் எப்படி உள்ளது.

அதன் நிலையை வழங்கி வருகிறது. ஜனநாயகக் குறியீட்டுக்கான உலகளாவிய தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு வந்துள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது.

ஜனநாயக பட்டியலில் இந்த சரிவு நாட்டில் சிவில் உரிமைகள் மோசமடைந்து வருவதால் ஏற்பட்டு உள்ளது.

ஒரு நாட்டில் நடைபெறும் தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைவாதம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய ஐந்து பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

அவற்றின் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், நாடுகள் நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன –

முழு ஜனநாயகம் (8 புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண்), குறைபாடுள்ள ஜனநாயகம் (6 க்கும் மேற்பட்டவை, ஆனால் 8 அல்லது 8 ஐ விட குறைவாக), கலப்பின ஆளுகை (4 ஐ விட அதிகமாகவோ அல்லது 6 ஐ விட குறைவாகவோ) மற்றும் சர்வாதிகார ஆட்சி (4 அல்லது அதற்கும் குறைவாக). இதன் அடிப்படையில் குறைபாடுள்ள ஜனநாயகப் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.