எழுத்தாளர் உதயசங்கருக்கு எழுதிய “ஆதனின் பொம்மை” நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது..

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை என்ற நாவல் சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்றுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த உதயசங்கர் சிறுகதை தொகுப்புகள்,கவிதை,கட்டுரை மற்றும் பல குழந்தை இலக்கியங்களை படைத்துள்ளார்.
மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம், அலாவுதீனின் சாகசங்கள் உள்ளிட்ட குழந்தை இலக்கியங்களை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கீழடியின் தொன்மையை குழந்தைகளின் அனுபவ உலகிற்குள் கொண்டு செல்லும் படைப்பான “ஆதனின் பொம்மை” நூலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு இவ்வாண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.