7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை விடுவிக்கக் உத்தரவிடக்கோரி பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் எம்எம்.சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.