சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளைக்கு ஏப்ரல்29 முதல் மே6 வரை கோடை விடுமுறை


சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைகாலங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 நீதிபதிகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15 நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.