ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்..


ஜப்பானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஓசாகா நகரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை சுமார் 8 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜப்பான் பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.