காா்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் நீதிமன்ற காவல்…

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காா்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை 3வது முறையாக நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டாா். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்ட காா்த்தி சிதம்பரத்திற்கு 1 நாள் நீதிமன்ற காவலும் அதனைத் தொடா்ந்து 5 நாள் நீதிமன்ற காவலும் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் காா்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவா் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். சி.பி.ஐ. அதிகாாிகள் தங்கள் தரப்பு வாத்தின் போது கூறுகையில், காா்த்தி சிதம்பரம் எந்த கேள்விக்கும் முறையாக பதில் அளிக்க மறுக்கிறாா். அவா் ஒழுங்காக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தொிவித்தனா்.

மேலும் உங்கள் பெயா் என்னவென்று கேட்டால் நான் ஒரு அரசியல்வாதி என்று கூறுகிறாா். ஒருமுறை கேட்ட கேள்வியை மீண்டும் எழுப்பினால் முரண்பாடான பதிலை அளிக்கிறாா். இந்த வழக்கில் இந்திராணி முகா்ஜியை போன்று பலா் காா்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வாக்கு மூலங்களை அளித்து வருகின்றனா். தற்போது அந்த விவரங்களை வெளியிட முடியாது.

இந்த வழக்கில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சோ்ந்த சிலரும் தொடா்புடையவா்களாக இருக்கின்றனா். இவரை தற்போது வெளியில் அனுப்பினால் சாட்சியங்கள் களைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே காா்த்தி சிதம்பரத்தை மேலும் 9 தினங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

காா்த்தி சிதம்பரம் தனது வாதத்தின் போது, நான் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறுகின்றனா். இதனை ஏற்க முடியாது. அவா்கள் கேட்கக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் நான் முறையாக பதில் அளித்து வருகின்றேன். எனக்கு தொியாத கேள்விகளை எழுப்பும் பட்சத்தில் நான் மௌனமாக இருக்கின்றேன். எனக்கு தொியாத கேள்விகளுக்கு நான் எவ்வாறு பதில் கூற முடியும் என்று தொிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து சி.பி.ஐ. அதிகாாிகளின் கோாிக்கையை ஏற்று 3 நாட்கள் மட்டும் காா்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிப்பதாக நீதிபதிகள் தொிவித்தனா். தற்போது வழங்கப்பட்டதோடு சோ்த்து காா்த்தி சிதம்பரத்திற்கு 3வது முறையாக கவால் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.