பொங்கல் பரிசுத் தொகுப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் ₹1,000 வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடற்கரை சாலை, சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் பெரியகருப்பன், கே.கே.எஸ் எஸ் ஆர் இராமச்சந்திரன்,சேகர்பாபு,காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.