சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ள்ளது.

அன்மையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில் பிரியதர்ஷினிக்கும்  வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிரியதர்ஷினி ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்க இருந்தார். பதவியேற்க தடைகோரி தேவி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிரியதர்ஷினி பதவியேற்க தடை விதித்துள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கும்,பிரியதர்ஷினிக்கும் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.