சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல்..

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவி- ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன்,ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜையும் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ கோரிக்கையை ஏற்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.