தமிழகத்தில் இன்று மேலும் 3645 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,956 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,690-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் தமிழகத்தில்

இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனாவால் 46 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது