தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,286 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில்,1,286 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இன்று(ஜூன் 3) ஒரே நாளில் 1,286 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 616 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 14,316 ஆக உயர்ந்தது. 11,435 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 1012 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 27 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆண்கள் 16,181, பெண்கள் 9,677 மற்றும் 14 திருநங்கைகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.