அன்னிய செலாவணி மோசடி: சசிகலாவை 13ம் தேதி நேரில் ஆஜர் படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி  வழக்கில் சசிகலாவை வரும் 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ டிவி நிர்வாகம் மீது அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக 5 வழக்கு விசாரணை சென்னை எழும்பூர்  முதலாவது  பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் நீதிபதி குற்றம்சாட்டபட்டவர்களிடம் கேள்விகளை கேட்டு பதிலை பதிவு செய்ய உள்ளார்.

அதன்படி நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக சசிகலாவை வரும் 13ஆம் தேதி நேரில் ஆஜர்ப்படுத்த பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.