சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…


சிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்-தை தமிழக போலீஸார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர் விரைவில் தமிழகம் கொண்டுவரப்படுவார்.