கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு..

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாகக்ல் செய்தனர்.
இதுபோல் மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்த நீலகிரி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.