மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல்..


மணல் தட்டுப்பாட்டைப் போக்க தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு மணல் இறக்குமதி செய்தது.

இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியே எடுப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

மணலை எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

வழக்கை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு இறக்குமதி செய்யப்பட்ட மணலை எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.