தமிழகத்தில் 2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு …

தமிழகத்தில் வடகிழக்கு பருவமலை வரும் 20ம் தேதி தொடங்கும் என எதிர்பார்த்தநிலையில் தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.